40,000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டுப் பெற்ற டாம் வீதியிலுள்ள கொழும்பு பிரதேச செயலகப் பிரிவின் கிராம அலுவலர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மெற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளரின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரை மாற்றுவதற்கு தேவையான ஆவணங்களை பெற்றுக் கொடுக்கவூம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நகர புனர்வாழ்வூத் திட்டத்தின் கீழ் முறைப்பாட்டாளருக்கு வீடொன்றினை பெற்றுக் கொள்வதற்கு முறைப்பாட்டாளரின் விண்ணப்பத்தை பிரேரித்து குறித்த பிரிவில் வசிப்பதாக வதிவிட சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காகவூம் 40000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற போது கொழும்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் ஒருவர் 2024.07.23 அன்று பிற்பகல் 4.15 மணியளவில் மோதர பிரதேசத்தில் உள்ள குறித்த கிராம அலுவலரின் அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்;ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவூள்ளார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search