வரகாபொல பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் நான்கு வழக்குகளிலும் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

வரகாபொல பிரதேச சபையின் முன்னால் தவிசாளரான போபே ஆரச்சிலாகே சந்தன கீர்த்திசிரி விஜேதுங்க என்பவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மூலம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவ்வழக்குகளின் இலக்கங்கள் வருமாறு 60483/2016, 60484/2016, 60485/2016, 60486/2016.

இங்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மூலம் மேற்படி பெயர்குறிப்பிட்ட எதிராளிக்கு எதிரான குற்றமாவது திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கான சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தலை வழங்கத் தவறியமையாகும். மேற்படி எதிராளி மேற்படி நான்கு குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக் கொண்டார். கௌரவ நீதிவான் எதிராளியை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்ததுடன் ஒவ்வொரு வழக்கிற்கும் வெவ்வேறாக ரூபா 1000.00 வீதம் தண்டப்பணம் விதித்ததுடன் அதனை செலுத்தத் தவறின் ஒரு வழக்கிற்கு தலா 03மாதங்கள் வீதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search