ஊழலுக்கு எதிரான உலகளாவிய நிபுணர் குழு சம்மேளனம் தொடர்பான ஊடக அறிக்கை

ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களை சுயாதீனமானதாகவும், பலமிக்கதாகவும் மாற்றும் நோக்கில் ஏற்றங்கீகரிக்கப்பட்ட ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான விஷேட உலகளாவிய நிபுணர் குழு கூட்டம் (EGM) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) ஐக்கிய நாடுகள் தாபனத்தின் அபாயகர போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிமனை (UNODC) மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) முதலான நிறுவனங்களுடன் இணைந்து மேற்படி சம்மேளனத்தை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக இச்சம்மேளனத்தின் அங்குராற்பண நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

உலகம் பூராகவும் ஊழலுக்க எதிராக செயற்படும் செயற்பாட்டாளர்கள், நிபுணர்களின் பங்குபற்றலுடன் 2012 ஆம் ஆண்டில் இந்துனேசியாவின் ஜகார்த்தா நகரில் முதன் முறையாக நடைபெற்ற மாநாடு, ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களை சுயாதீனமானதாகவும், பலமிக்கதாகவும் மாற்றும் நோக்கினை இலக்காக கொண்டிருந்தது. அதனடிப்படையில் கொழும்பில் நடைபெறும் 3 நாள் சமமேளனத்திற்காக உலகம் பூராகவும் சுமார் 30 நாடுகளின் ஊழலுக்கு எதிரான நிறுவனங்களின் பிராதானிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் தாபனத்தின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் (UNCAC) 6 மற்றும் 36 வது பிரிவுகளினை பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவதற்கான அறிவினை விருத்தி செய்து கொள்ளும் உன்னத நோக்கில் சமவாயத்தில் கையெழுத்திட்ட அங்கத்துவ நாடுகளின் வேண்டுகோளிற்கிணங்க 'ஊழலுக்கு எதிரான நிறுவனங்களின் கொள்கைகள் தொடர்பான ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான அறிவுசார் கலந்துரையாடலை விருத்தி செய்தல்” தொடர்பில் இவ்நிபுணத்துவ கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச ரீதியாக ஏற்றங்கீகரிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் சமவாயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் தாபனத்தின் ஊழலுக்கு எதிரான அங்கத்துவ நாடுகளில் ஜகார்த்தா பிரகடன விதிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும், ஊழலுக்கு எதிரான நிறுவனங்களை பலமிக்கதாக மாற்றுவதனையும் இலக்காகக் கொண்டு இச்சமவாயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளில் பிராந்திய ரீதியில் முன்மாதிரியாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்படும் நிலையினை மையமாகக் கொண்டு அதனை ஏற்று அதற்கான சர்வதேச அங்கீகாரத்தினை வழங்கும் வகையிலேயே ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மூலம் இவ்நிபுணத்துவ கலந்துரையாடலுக்கான இணை ஏற்பாட்டாளராக பங்குபற்றுமாறு விடுத்த அழைப்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றோம். இது ஊழலுக்கு எதிரான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்புடனான பயணத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.

இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் நாடளாவிய ரீதியில் பொதுமக்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களுடைய கருத்துக்களையும், பரிந்துரைகளையும் பெற்று 'ஊழலுக்கு எதிரான தேசிய செயல் திட்டத்தை 'தாயாரிப்பதற்கான வரைவினை பூர்த்தி செய்துள்ள இச்சந்தர்ப்பத்தில், அவ் தேசிய செயல் திட்டத்தை உருவாக்கும் செயன்முறையை பலமிக்கதாக மாற்றுவதற்கு, இச்சம்மேளனத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் எமக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கின்றோம்.

இலங்கைப் பராளுமன்ற அமைச்சரவையின் அனுமதியுடன் புதிய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு சட்டத்தை உருவாக்கவுள்ள நிலையில், இச்சம்மேளனத்தை நடாத்துவதன் மூலம்;; பெற்றுக் கொள்ளப்படும் அனுபவங்கள், மற்றும் சர்வதேச நியதிகள் தொடர்பான அறிவு எமது முயற்சிகள் வெற்றி பெற பெரிதும் வாய்ப்பாக அமையும் என்றால் அது மிகையாகாது.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search