இலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத பெருந்தொகையான வாகனங்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினர் மோசடியான முறைகளில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நட்டத்தினை ஏற்படுத்தியமை

இலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத கிட்டத்தட்ட 400 வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால் மோசடியான முறைகளில் பதிவு செய்துள்ளமை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவல்களை அடுத்து அதில் 156 வாகனங்கள் பற்றிய
உண்மைத்தகவல்கள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் சொகுசு வாகனப்பிரிவில் உள்ளடங்குவதுடன், சுங்கத் திணைக்களத்தில் உரிய முறையில் அனுமதி பெறப்படாததாலும், பல வருட கால தாமதத்திற்குப் பின்னர் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால் போலியான முறையில் பதிவு செய்யப்படுவதாலும் அரசாங்கத்திற்கு பாரிய வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, மேற்குறித்த வாகனங்களில் 7 வாகனங்களை உரிமையாளர்களிடம் இருந்து கைப்பற்றி சுங்கத்திடம் வழங்குமாறு நீதிமன்றத்தினால் ஆணைக்குழுவிற்கு பணிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றில் 6 வாகனங்கள் ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 5 வாகனங்கள் சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஐவர் உள்ளடங்களாக ஏழு பேர் மீது ஆணைக்குழு வழக்குத் தொடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search