இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு(FIU) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு இடையில் 2024.05.14 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சார்பாக அதன் பணிப்பாளர் நாயகம் திரு. டப்.கே.டீ. விஜேரத்ன அவர்கள் மற்றும் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு சார்பாக அதன் பணிப்பாளர் திருமதி. சுபானி கீர்த்திரத்ன ஆகியோர் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

2023 ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இக்கூட்டுறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு சாராருக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் அநாமதேய உறவினை விருத்தி செய்வதற்காக கைச்சாத்திடப்பட்ட இவ்வொப்பந்தத்தின் முக்கிய குறிக்கோளானது, புலனாய்வு நடவடிக்கைகளுடன் தொடர்பான ரகசிய தரவுகளை இரண்டு நிறுவனங்களுக்கும் இடையில் பரிமாற்றம் செய்து கொள்வதாகும்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search