சுங்கத்தில் அனுமதியளிக்கப்படாத வாகனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக மீண்டும் சுங்கத்திடம் ஒப்படைப்பு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வூப் பிரிவிற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இலங்கை சுங்கத்தில் அனுமதியளிக்கப்படாத வாகனங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்விசாரணைகளைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 3 வாகனங்கள் கொழும்பு பிரதான நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத்திடம் கையளிக்குமாறு 2024.08.23 அன்று கணம் நீதவான் திலின கமகே அவர்கள் ஆணையிட்டார்;.

நீதிமன்ற கட்டளையின் பேரில் வாகனங்களை ஆணைக்குழுவிற்கு கையளிக்கத்தவறிய நபர்களை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன்இ நீதிமன்ற கெடு காலத்தை நீட்டித்துக்கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு தமது வாகனங்களை 2024.09.11 இற்கு முன்னர் ஆணைக்குழுவிடம் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு உதவிய சுங்க அதிகாரிகள் மற்றும் அவற்றை பதிவூ செய்வதற்கு உதவி செய்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு நீதிமன்றத்தினால் ஆணையிடப்பட்டதுடன்இ இவ்வழக்கானது 2024.09.18 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search