இலஞ்ச வழக்கொன்றின் முக்கிய சாட்சியாளர் முன்னுக்குப்பின் முரணான சாட்சிகளை வழங்கியதன் காரணமாக மேல் நீதிமன்றத்தினால் அவர் மீது அதிகுற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை

பலாங்கொட மதுவரி அலுவலகத்தின் மதுவரி உத்தியோகத்தர்கள் ஐவருக்கு எதிராக வழக்கிலக்கம் Hஊடீஃ112ஃ2021 இன் கீழ் இலஞ்சம் கேட்டுப்பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கின் முக்கிய சாட்சி மேல் நீதிமன்றத்தில் முக்கிமான விடயம் தொடர்பாக முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறியமையால்இ பொய் சாட்சி வழங்கிய குற்றச்சாட்டில் அவர் மீது அதிகுற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன அவர்களால் 250இ000.00 ரூபாய் பிணை மற்றும் 25 இலட்சம் பெறுமதியான 2 சரீரப்பிணைகளில் குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டார். 2024.08.29 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்ததன் பின்னர் 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்ப சட்டத்தின் 147 ஆவது பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த நபருக்கெதிராக கௌரவ மேல்நீதிமன்றத்தில் அதிகுற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search