முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சருக்கு எதிராக மூன்று ஊழல் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு. உன்னதி பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மூன்று வழக்குகளை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ளது. அதன்படி,

வழக்கு இலக்கம் HCB/353/2025 இன் கீழ், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையால் 3000 வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டதன் மூலம் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு ரூ. 128,520 /- நட்டம் ஏற்படுத்தி ஊழல் குற்றம் புரிந்தமை.

வழக்கு இலக்கம் HCB/354/2025 இன் கீழ், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையானது, மஹாவௌ வீ ஹேன ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.360,000/= தொகையைச் செலுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளைத் தூண்டி ஊழல் குற்றம் புரிந்தமை.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு எதிரான வழக்கு இலக்கம் HCB/355/2025 இன் கீழ், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளை வற்புறுத்தி, அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், சிலாபம் தேசிய சேமிப்பு வங்கியின் கணக்கில் ரூ.494,000/= வரவு வைக்க வேண்டுமென்று பணித்தமை மூலம் குறித்த தொகையை அரசு இழக்க நேரிட்டமை மூலம் ஊழல் குற்றம் புரிந்தமை.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 08.01.2025 அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 03 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search