இலஞ்சம் பெற்;ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு மோட்டார் சைக்கில் பயணியிடமிருந்து  இருந்து ரூ. 3000.00 இலஞ்சமாக கோரிப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 20,000.00 அபராதமும்  விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்த பொலிஸ் அலுவலர் விபத்தொன்றில் 6 வயது சிறுவர் காயமடைந்த நிலையில் மோட்டார் சைக்கில் பயணியிடமிருந்து  3000.00 ரூபாவினை இலஞ்சமாக கோரியதுடன் வழங்காது விடில் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்வதுடன், சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் துரித தொலைபேசி இலக்கமான 1954 இற்கு கிடைத்த அழைப்பின் பேரில் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முறைப்பாட்டாளரின் உதவியுடன்  சுற்றிவளைப்பினை மேற்கொண்டு குறித்த பொலிஸ் அலுவலரை கைது செய்து மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணையின்போது>  ஆணைக்குழுவின் சட்டவாதி சட்டத்தை நிலைநாட்டும் அலுவலர்களான போக்குவரத்து பொலிஸார் சட்ட விதிகளை பேணி செயற்படுவதனூடாகவே பாதுகாப்பான போக்குவரத்து முறையை ஏற்படுத்தி அனாவசியமான விபத்துக்ககளை தவிர்க்க பங்களிக்களாம். எனவே இவர்களின் முன்மாதிரியான செயற்பாடு மிகவும் அவசியமாகும். ஆனால் இன்று நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. குறித்த துறையில் இலஞ்சமும் ஊழலும் மலிந்துள்ளது. இதனால் அப்பாவிப் பொதுமக்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த நாடும் பாதிக்கப்படுகின்றது. எனவே இதனை இல்லாதொழிக்க இவ்வாறான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை  வழங்குதல் வேண்டும். அதனூடாக சமூகத்தை நேர்வழிப்படுத்தலாம்.

இதன் அடிப்படையில் வழக்கு விசாரனை நிறைவில் கௌரவ  உயர் நீதிமன்ற நீதிபதி திரு. கிஹான் குலதுங்க அவர்கள் இன்று இலஞ்ச குற்றம் சமுதாயத்தில் ஒரு புற்றுநோயாக மாறியிருப்பதாகவும்> இதனை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன்  மேற்படி குற்றவாளிக்கான தீர்ப்பனை வழங்கினார்.

CIABOC இன் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறியின் நெறிப்படுத்தலின் கீழ் பொலிஸ் பரிசோதகர் அபேசிங்க தலைமையிலான குழுவினரால் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்களினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் (சட்டம்)  திருமதி மனோதி ஹேவாவஸம்   அவர்களினால் வழக்காடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search