பொதுமகன் ஒருவரிடம் ரூபா 450,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட கிராமசேவகர் ஒருவரை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு எதிராக இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் ரூபா 10,000.00 தண்டப்பணமும் விதித்துத் தீர்ப்பபளித்தது.
பொதுமகன் ஒருவரிடம் ரூபா 450,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட கிராமசேவகர் ஒருவரை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு எதிராக இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் ரூபா 10,000.00 தண்டப்பணமும் விதித்துத் தீர்ப்பபளித்தது.
கஹவத்த பொலிஸ் நிலையத்தில் சேவை புரிந்த முன்னாள் பொலிஸ் சார்ஜென்ட் ஆர்.எம். ஜயசேன இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ பிரதீப் ஹெட்டியாரச்சி அவர்களினால் 23.07.2019 அன்று இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தின் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றவாளியாக்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட / மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றிய ஒருவர் 4500.00 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலதுங்கா அவர்களினால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும்> ரூபா 5000.00 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தெரானியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிகா விஜேசிங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலத்துங்க அவர்கள் இன்று (04) 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் மாத்தளை மாவட்ட தொழிலாளர் திணைக்கள அலுவலகத்தில் தொழில் அலுவலராக சேவைபுரிந்த குற்றஞ்சாட்டப்பட்டவர் முறைப்பாட்டாளர் தனது கராஜில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நுPகு கட்டணத்தை செலுத்தாமலிருக்க உதவும் வகையில், முறைப்பாட்டாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அவரிடமிருந்து இருந்து ரூ. 150,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட போது ஆணைக்குழுவின் சுற்றி வளைப்புப்பிரிவினால் கைது செய்யப்பட்டு மேற்படி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கிலக்கம்: 6835/2012
குற்றஞ்சாட்டப்பட்டவர்: எஸ். வீ. பி. ஹெக்டர் தர்மசிரி
கஹவத்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ விகும் கலுஆரச்சி அவர்கள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டார்.
ஆணைக்குழுவிற்கு கிடைககப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் களுத்துறை பிரதேச சபைத் தலைவர் லக்ஷ்மன் விதான பதிரன முறைப்பாட்டளருக்கு நுழைவுப் பாதையை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக ரூபா 3 மில்லினை கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆணைக்குழுவிற்கு கிடைககப்பெற்ற அநாமேதைய முறைப்பாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2019.02.01 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி துலானி அமரசிங்க அவர்கள், ஹிங்குரக்கொட பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் டப்ளிவ். குணவர்தன என்பவருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அது 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், மேலதிகமாக ரூபா 10000.00 தண்டம் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத்தவறின் மேலும் 6மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கொகரல்லை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முறைப்பாட்டாளரிடமிருந்து இருந்து ரூ. 5000.00இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நான்கு குற்றச்சாட்டுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்துள்ளது.
ஒரு மோட்டார் சைக்கில் பயணியிடமிருந்து இருந்து ரூ. 3000.00 இலஞ்சமாக கோரிப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 20,000.00 அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மஸ்கெலியா மிருக வைத்திய அலுவலக பரிசோதகர் ஒருவர் முறைப்பாட்டாளரிடமிருந்து இருந்து ரூ. 5000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்காக மிருக வைத்திய அலுவலக பரிசோதகருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 5000.00 அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954