இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய , சபுகஸ்கந்த காவல்துறை நிலையத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவரை 100,000 ரூபாவை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 02.06.2023 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.