இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இலங்கை சுங்கத்தின் அனுமதி பெறப்படாத வாகனங்கள் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் பொறுப்பில் எடுக்கப்பட்ட மிட்சுபிசி ஜீப் வாகனமொன்று நீதிமன்ற உத்தரவின் பெயரில் 11.10.2024 அன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் மேலதிக சுங்க விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத்திடம் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே அவர்களால் ஆணையிடப்பட்டது.