இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் ரூபா 100,000.00 (ஒரு இலட்சம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் ரூபா 100,000.00 (ஒரு இலட்சம் ரூபாய்) இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு ஒரு ஜீப்பை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, அதை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் முறையற்ற விதத்தில் பதிவு செய்து ஊழல் முறைகேடுகளைச் செய்ததமை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் கிரிவனாகாரய பகுதியின் கனத்த வௌவைச் சேர்ந்த ஒரு வியாபாரி 23.04.2025 அன்று வாரியபொல பகுதியில் வைத்து, ஊழல் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில்; இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) 24.04.2025 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஊவா மாகாண சபையால் பதுளை தேசிய சேமிப்பு வங்கியில் பராமரிக்கப்படும் நிலையான வைப்புத்தொகைகளை உரிய தேதிக்கு முன்னர் திரும்பப் பெறுவதன் மூலம், ஊவா மாகாண சபைக்கு கிடைக்கக்கூடிய வட்டி வருமானத்தை இழந்து ஊவா மாகாண சபைக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆணைக்குழுவின் வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களின் ஊழல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடந்த 10.04.2025 அன்று ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையின்படி, தொடர்புடைய விசாரணை நிகழ்வுகளுக்கும் அவருடைய கருத்துக்களுக்கும் பிணைப்பு இருப்பதனை ஆணைக்குழு தனது அவதானத்திற்குற்படுத்தியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் அழைப்பின் பேரில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம் கடந்த 20-03-2025 அன்று இலங்கை மின்சார சபை, பிலியந்தலை பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்சித்திட்டத்தில் நேர்மைத்திறன்இ அரச ஊழியர்களின் பொறுப்படமை மற்றும் செயற்றினை மேம்படுத்தல், இலஞ்சம் மற்றும் ஊழலின் விளைவுகள்இ இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்த தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வேற்படுத்தப்பட்டது.
ஸ்ரீ லங்கா டெலிகோம் மொபிடல் தனியார் கம்பனி அலுவலர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய தொடர்ச்சியான தடுப்பு நிவாரண திட்டங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சித்திட்டம் 2025.03.03 ஆம் திகதி அன்று ஸ்ரீ லங்கா டெலிகோம் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் அதில் 110 அலுவலர்கள் பங்குபற்றினர்.
வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் நவமுனி ஆராச்சிகே சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு இலஞ்ச சட்டத்தின் பிரிவு 70 இன் கீழான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்ப வடமத்திய மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனிப்பட்ட செயலாளரின் வாகனத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்தமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தின் குற்றங்கள் நிரூபனமானதின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்ற இலக்கம் 01 இன் தலைமை நீதிபதி கௌரவ ஆதித்ய படபெந்திகே அவரிகளினால் குற்றவாளியாக்கப்பட்டு 2025.04.02 ஆம் திகதி திறந்த நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்;டது.
இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனங்களைப் பதிவு செய்வதன் மூலம் செய்யப்பட்ட ஊழல் முறைகேடுகள் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணையின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேலும் 12 வாகனங்கள் (கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில்) ஏப்ரல் 01, 02 மற்றும் 03 ஆகிய திகதிகளில் ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டன. அவை பின்வருமாறு.
ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் ஊவா மாகாண சபையின் செயற்திட்டத்திற்காக என்று கூறி மூன்று வங்கிகளில் இருந்து அனுசரணையாக பெற்றுக் கொண்ட நிதியினை குற்றஞ்சாட்டப்பட்டவரான தனது பெயரிலுள்ள அமைப்பின் கணக்கில் வரவு வைத்தமை உள்ளிட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க. 2025.03.27 பி.ப 2.25 இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கிடைக்கப்பெற்ற இரண்டு முறைப்பாடுகள் (அரசாங்க வேலை வழங்குவதாக வாக்குறுதியளித்து இலஞ்சமாக ரூபா 200,000.00 மற்றும் ரூபா 150,000.00 கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில்) கடந்த 2025.03.26 ஆம் திகதி கண்டி பிரதேசத்தில் காலை 9.15 மணியளவில்; ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் (ஐ.தே.க) தொன் ஹரீந்திர சானக ஐலப்பெரும கைது செய்யப்பட்டார்.
இலங்கை மின்சார சபையின் அழைப்பின் பேரில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம் கடந்த 18-03-2025 அன்று இலங்கை மின்சார சபை, பிலியந்தலை பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், சுமார் 80 அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தொழிலாளர் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் தொழிலாளர் திணைக்கள அலுவலர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான தடுப்பு நிவாரண நிகழ்ச்சித்திட்டம் கடந்த 21-03-2025 அன்று தொழிலாளர் தினைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, இதில் சுமார் 150 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு



இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954