மீரிகம பிரதேசத்தில் வசிக்கும் வியாபாரி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30 சிசிடிவி (CCTV) கமராக்களை உரிய வரியைச் செலுத்தாமல் மத்திய தபால் பரிவர்த்தனையின் சர்வதேச விரைவுப் பிரிவில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முறைப்பாட்டாளரிடம் ரூபா 11000.00 இலஞ்சமாக கோரிப்பெற்றுக் கொண்டமை தொடர்பில் ராமவிக்ரம கமாராச்சிகே ருவன் என்பவருக்கு எதிராக ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட HCB 176/2022 வழக்கின் அடிப்படையில் நீதிமன்றத்தினால் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.