மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) விசாரணை அதிகாரிகளால் 06.08.2025 அன்று கைது செய்யப்பட்டார்.
மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) விசாரணை அதிகாரிகளால் 06.08.2025 அன்று கைது செய்யப்பட்டார்.
ஒக்கம்பிட்டி காமினிபுர பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி ஒக்கம்பிட்டி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், ரூ. 40,000/- - இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பின் போது நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகம் அருகே ரூ.10000.00 இலஞ்சம் பெற்றதற்காக இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய கார்டி ஹேவகே டான் ஷான் யஹம்பத் குணரத்ன என்ற நபர், வெளிநாட்டு சேவை பணியகத்தின் அதிகாரிகளுக்கான வெளிவாரி பயிற்சி பட்டறைக்கான முன்மொழிவைச் சமர்ப்பித்த ஒரு நிறுவனத்திடமிருந்து பணம் கேட்டு கொள்முதல் செயல்பாட்டில் முறையற்ற முறையில் தலையிட்டு> தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து ரூ. 4.3 மில்லியன் ரூபாவினை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்பான விசாரணை தொடர்பில் 22.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (ஊஐயுடீழுஊ) ஜூன் 9, 2025 அன்று கட்டுநாயக்கவில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பிரதான கேட்போர் கூடத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் சிறப்பு செயல்பாட்டுப் பகுதிகளில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் ஒரு விழிப்புணர்வு அமர்வை நடத்தியது.
ரத்தொலுகமவில் வசிக்கும் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் படி, ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒரு பொலீஸ் கான்ஸ்டபிள், 14.07.2025 அன்று மாலை 7.05 மணியளவில் ரத்தொலுகம, வெத்தேவ சந்தியில், போக்குவரத்துக் குற்றத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் சாரதி அனுமதிப்பத்திரத்தை திருப்பித் தர ரூபா 3000/= (மூவாயிரம் ரூபா) இலஞ்சம் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, GS - 9164 கொண்ட வாகனத்தை சட்டவிரோதமாகப் பதிவு செய்ததற்காக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் 14.07.2025 அன்று ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் பின்வருமாறு.
ராகம பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் அளித்த முறைப்பாட்டடின் படி, சந்தேக நபர்கள் 2025.07.07 அன்று முறைபப்hட்டாளர் மீது போதைப்பொருள் விற்பனை செய்ததாக பொய்யாகக் குற்றம் சாட்டி, அவரது வீட்டைச் சோதனை செய்து, 50 கிராம் போதைப்பொருட்களைக் கண்டுபிடித்து, வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்க்க ரூபா 500>000.0 (ரூபா ஐந்து இலட்சம்) இலஞ்சமாகக் கோரியுள்ளனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளுக்கான தடுப்பு நிவாரண நிகழ்சிச ஜூன் 17, 2025 அன்று நாவல அலுவலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஊழல் தடுப்பு அதிகாரி திரு. சம்பத் ஆராச்சிகே இந்த நிகழ்ச்சிக்கான வளவாளராக கலந்து சிறப்பித்ததுடன் இந்த நிகழ்ச்சியின் மூலம், நேர்மைத்திறன், ஒரு அரச அதிகாரியின் செயல்திறன் மற்றும் பொறுப்பு, ஒரு அரச அதிகாரியின் பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல், 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம், இலஞ்சம், ஊழல் மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்தல் தொடர்பான புதிய சட்ட விதிகள் மற்றும் இது தொடர்பாக அவர்களுக்கு உள்ள சந்தேக நிவர்த்திகள் மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவின் பொறுப்புக்களும் பணிகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டின் படி தெமட்டகொட, கொலன்னாவ சாலையில் இயங்கும் ஒரு நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி அனுமதி அறிக்கையைப் பெற நடவடிக்கை எடுக்கும்போது, முறைப்பாட்டாளர், கடந்த வருடத்திற்கான ரூ.1.100,000/= (பதினொரு இலட்சம் ரூபாய்) வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, 2025ஆம் ஆண்டிற்கான வருமான வரி அனுமதி அறிக்கையை வழங்குவதற்கு ரூபா.100,000/= இலஞ்சமாக கோரியதுடன் அந்தத் தொகையை ரூபா.50,000/= (ஐம்பதாயிரம் ரூபாய்) ஆகக் குறைத்து குறைக்கப்பட்ட தொகையிலிருந்து ரூ.42>000.00 (நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாய்) 2025.07.03 அன்று இலஞ்சமாகக் கோரிப் பெறப்பட்டதுடன், மீதமுள்ள ரூபா.8000.00 (எட்டாயிரம் ரூபாயினை) ஜாவத்தையில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள நகரக் கிளையின் அலுவலகத்தில் வைத்து இலஞ்சமாகக் கோரிப் பெறப்பபட்ட சந்தர்ப்பத்தில் பிரதி ஆணையாளர் கே.சி.கே. குமார அவர்கள் 2025.07.07 அன்று பிற்பகல் 3.08 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
(பத்தாயிரம் ரூபாய்) இலஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். பேராதனை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சாரதி ஆகி யோர்; பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் தாவர வளர்ச்சி ஹார்மோன்களை உற்பத்தி செய் யும் தொழிலைப் பதிவு செய்வதற்காக உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளை ஆய்வு செய்ய அதிகாரி கள் வந்த வாகனத்திற்கு எரிபொருளைப் பெறுவதற்காக புகார்தாரரிடமிருந்து ரூபா 10,000/= (பத்தாயிரம் ரூ பாய்) இலஞ்சம் கேட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 03.07.2025 அன்று பிற்பகல் 1.30 மணி யளவில், முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
பொருளாதார அபிவருத்தி பிரதி அமைச்சராகவும், விஸேட செயற்றிட்ட அமைச்சராகவும் பணியா ற்றிய சமரக்கோன் முதியன்செலகே சந்திரசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலில் சலுகை பெறும் நோக்கில், தனது அரசியல் பங்காளிகள் மூலம்> மா வட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தவறாக வழிநடத்தி, 2014 ஆம் ஆண்டு ரூ.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு



இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954