இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் 2025ஆம் ஆண்டுக்கான பணிகள் இன்று (2025.01.01) காலை 8.30 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பமாக உரையாற்றிய பணிப்பாளர் நாயகம் திருமதி எம்.ஆர்.வை.கே. உடவெல, ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் மூலம் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பரந்தளவிலான அதிகாரங்களுடன் கடமைகளை நிறைவேற்றுவதில் அனைத்து அதிகாரிகளினதும் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்பதனை வலியுறுத்தினார்.