பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமைய, குத்தகை முறையில் 3 குத்தகை நிறுவனங்கள் மூலமாக அவர் பெற்ற பஸ் வண்டிகளின் குத்தகைக்காலம் முடிவடைந்ததும் குறித்த பஸ் வண்டிகளின் பூரண உரிமையினை அவரது பெயரில் மாற்றித்தருவதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாள் ஒருவர், அபிவிருத்தி உதவியாளர் மற்றும் தரகர் ஒருவர் 2024.10.04 அன்று பிற்பகல் 3.30 அளவில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.