பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக போராடுவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதனை நோக்காகக் கொண்ட கலந்துரையாடல் ஒன்று அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் 2024.03.01 அன்று விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை)(தனியார்) நிறுவனத்தின் அமைச்சரவை பங்களாவில் இடம்பெற்றது.