அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய சுங்க வரியை செலுத்தாமல், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6,000 மோட்டார் வாகனங்கள் பாவணையில்; இருப்பது குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பொய்யாக பதிவு செய்யப்பட்ட அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காகவும் சுங்க வரிகள் மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அந்த வாகனங்களின்; இரண்டாவது அல்லது அடுத்தடுத்து வரும் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களையும் நெருக்கீடுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.