டில்ருக்ஸி ஒப்பந்த மற்றும் விநியோக நிலையத்தின் உரிமையாளருக்கு 10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை.
டில்ருக்ஸி ஒப்பந்த மற்றும் விநியோக நிலையத்தின் உரிமையாளருக்கு 10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை.
முன்னர் எவ்வித அனுமதியும் பெறப்படாத நிலையில் தயாரித்து வழங்கப்பட்டிருந்த கட்டட திட்டத்திற்குரிய தண்டப்பணத்தை செலுத்தாமல் இருக்கவும், புதிய கட்டடமொன்றிற்கான திட்டத்தினை வழங்குவதற்கும் முறைப்பாட்டாளரிடம் ரூபா 150,000.00 இனை வெகுமதியாகப் பெற்றுக் கொண்ட நிலையில் 2016 ஆகஸ்ட் மாதம் 16 ஆம்திகதி வெற்றிகரமான சுற்றி வளைப்பின் மூலம் மேற்படி சந்தேக நபரை கைதுசெய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப்பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
புத்தளம். மாவட்ட / நீதிவான் நீதிமன்றத்தில் கோவை செய்யப்பட்டிருந்த பராமரிப்பு வழக்கொன்றின் பிரதிபலனாக கொடுக்கப்படவேண்டிய பராமரிப்பு தொகையை குறைப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் ரூபா 4500.00 இனை வெகுமதியாகப் பெற்றுக் கொண்ட நிலையில் புத்தளம். மாவட்ட / நீதிவான் நீதிமன்றத்தின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரினை2016 ஜூலை மாதம் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான சுற்றிவளைப்பின் மூலம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப்பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு கைது செய்ய வாய்ப்பு கிடைத்தது.
வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்ற குறித்த பாடசாலையின் நடன ஆசிரியை ஒருவரால் புதிய பாடசாலை அதிபருக்கு கையளிக்கப்பவிருந்த அலுவலக கடிதங்களுக்கு கையொப்பபிடுவதற்காக முறைப்பாட்டாளரிடம் ரூபா 2750.00 இனை அவா நிறைவாகப் பெற்றுக் கொண்ட நிலையில்2016 ஜூலை மாதம் 15 ஆம் திகதி சந்தேக நபரினை கைது செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப்பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு முடியுமானது.
மணல் மற்றும் கல் சேகரிப்பிற்கு முறைப்பாட்டாளருக்கு வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான சரணாலயப்பகுதிக்குள் உள்நுழைவதற்கு அனுமதி வழங்கும் பொருட்டு ரூபா 50,000.00 இனை வெகுமதியாகப் பெற்றுக் கொண்ட நிலையில் மேற்படி சந்தேக நபர் 2016 ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெற்றிகரமான சுற்றிவளைப்பின் மூலம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்பு பிரிவு விசாரணை அதிகாரிகளினால் கைது செய்ய முடியுமானது.
முறைப்பாட்டாளரை கேரள கஞ்சா உடமையில் வைத்திருந்தமைக்கு கைது செய்வதினை தடுக்கும் வகையில் முறைப்பாட்டாளரிடம் ரூபா5000.00 இனை வெகுமதியாகப் பெற்றுக் கொண்ட நிலையில் 2016 ஜூலை மாதம் 05 ஆம் திகதி மேற்படி பொலிஸ் கான்ஸ்டபில்லை கைது செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப்பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது.
முறைப்பாடடாளருக்கு உறுதிப்படுத்தல் கடிதம் ஒன்றினை வழங்குவதற்காக ரூபா 15,000.00 இனை அவா நிறைவாகப் பெற்றுக் கொண்ட நிலையில் மனம்பிட்டிய வட்டார வன அலுவலகத்தின் பீட்டு வன அலுவலர் ஒருவரினை 2016 ஜூன் மாதம் 22 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கைது செய்தது.
புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தினை வழங்குவதற்காக ரூபா 7500.00 அவா நிறைவாகப் பெற்றுக் கொண்ட நிலையில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கிளையின் அலுவலக உதவியாளரினை 2016 ஜூன் மாதம் 21 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கைது செய்தது.
நீதிமன்றத்தின் முன்னிலையில் முறைப்பாட்டாளருக்கு சார்பாக சான்றளிப்பதற்காக ரூபா 100,000.00 இனை பெற்றுக் கொண்ட நிலையில் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் விஷேட குற்றவியல் விசாரணைப்பிரிவில் நிலையப் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் 2016 ஜுன் மாதம் 20 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்பு பிரிவு விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
மதிப்பீடு ஒன்றினை வழங்குவதற்காக ரூபா 10000.00 இனை அவா நிறைவாக பெற்றுக் கொண்ட நிலையில் சிரேஷ்ட மதிப்பீட்டாளர் ஒருவரினை2016 ஜூன் மாதம் 02 ஆம் திகதி கைது செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகளுக்கு முடியுமானது.
சான்றுப்படுத்தல் கடிதம் ஒன்றினை வழங்குவதற்கு ரூபா 15000.00 இனை அவாநிறைவாகப் பெற்றுக் கொண்ட நிலையில் உடுநுவர பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு உரித்தான இலக்கம் 103, மாவ் கும்புர வடக்கு கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகரினை 2016 மே மாதம் 31 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கைது செய்தது.
முறைப்பாட்டாளர் சார்பாக வீதி அபிவிருத்தி ஒப்பந்தம் ஒன்றிற்கு கட்டுப்பண ரசீதை தயாரிப்பதற்காக ரூபா 75,000.00 இனை வெகுமதியாகப் பெற்றுக் கொண்ட நிலையில் தென்மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவலம பிராந்திய பொறியியலாளர் அலுவலகத்தில் கடமைபுரியும் தொழில் நுட்ப அலுவலர் ஒருவரினை 2016 மே மாதம் 26ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கைது செய்தது
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954