நிகவரடிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ரூபா. 425,000.00 பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் நிகவரடிய பிரதேச சபை உறுப்பினர் 2021.03.02 ஆம் திகதி நிகவரடிய புத்தளம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல்
நால்ல, திவுல்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவரின் முறைப்பாட்டிற்கு அமைய ரூபா. 500.00 பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அத்தனகல்ல காணி பதிவாளர் திணைக்கள அலுவலகத்தின் கனிஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்;தர் 2021.02.17 ஆம் திகதி அலுவலகத்தில் வைத்து இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரினால் கொள்வனவு செய்து வெட்டப்பட்டுள்ள 03 பலா மரங்கள் மற்றும் ஒரு முதிரை மரத்தைக் கொண்டு செல்வதற்காக போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்குவதற்கு மற்றும் அதற்குரிய ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஒரு மரத்திற்காக ரூபா 2000.00 வீதம் ரூபா 8000.00 பணத்தை களுத்துறை பிரதேச செயலக அலுவலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ள கிராம சேவை உத்தியோகத்தரினால் இலஞ்சமாகக் கோரி அதனை 2021.02.10 ஆம் திகதி பெற்றுக் கொண்ட வேளையில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவரினால் மேற்கௌ;ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய இலஞ்சம் கோரி அதனைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய கோட்டே மாநகர சபையின் சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்தின் பதில் சுகாதார நிருவாகி 2021.02.03 ஆம் திகதி இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு
உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.
கோடா தொடா;பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்த விடுதலை பெற்ற ஒருவருக்கு மீண்டும் வழக்கு தொடா;வதாகவூம் மற்றும் சட்ட விரோத மதுபானம் தொடா;பில் மீண்டும் புதிதாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதாகும் தொpவித்து அவ்வாறு மேற்கொள்ளாதிருக்க மாதாந்தம் ரூபா 5இ000ஃஸ்ரீ வீதம் இலஞ்சமாக கோhpஇ அதில் 2020 ஜுலை மாதத்திற்குhpய 5இ000ஃஸ்ரீ நிதியை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வேளையில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தா;களினால் 2020.07.20 ஆம் திகதி நுகேகொட சிறுவா; மற்றும் மகளிh; பணியகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகா; கைது செய்யப்பட்டுள்ளாh;.
மடாடுகம கல்கிரியாகம பகுதியின் விவசாய அமைப்புகளின் அதிகாரிகளுக்கான இரண்டு விழிப்புணர்வு திட்டங்கள் முறையே 2019/12/26 மற்றும் 2019/12/27 ஆகிய திகதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அலகமுவ தொகுதி அலுவலகம் மற்றும் மகாவலி அதிகாரசபையின் கல்கிரியாகம தொகுதி அலுவலகத்தில் நடத்தப்பட்டன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் இலஞ்ச ஊழல் எதிர்ப்பில் பொதுமக்களின் பொறுப்பு வலியுறுத்தப்பட்டது. 2019/12/26 அன்று மதியம் 1.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இப்பகுதியில் உள்ள மகாவலி அதிகார சபையின் அரசு அதிகாரிகளுக்கான மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி அலகமுவ தொகுதி அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இந்த அமர்வில் இலஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து தடுக்கப்பட வேண்டிய அரசு ஊழியர்களின் பொறுப்பு மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றத்திற்காக தண்டனைகள் அதன் பாரதூர விளைவுகள் சுட்டிக்காட்டப்பட்டன. பங்குபற்றுனர்கள் இந்த நிகழ்ச்சித் திட்டங்களினூடாக கேள்விகளைக் கேட்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டதுடன் பெரிதும் ஆர்வத்துடன் பங்குபற்றினர். இந்த நிகழ்ச்சிகளை மகாவலி ஏற்பாடு அதிகார சபை ஏற்பாடு செய்ததிருந்தது. ஆணைக்குழுவின் சார்பில் உதவி பணிப்பாளர் சட்டம் திரு. சகித விக்ரமரத்ன மற்றும் ஊழல் பிரிவு IV நிலையப் பொறுப்பதிகாரி திரு. யு.பி. விக்ரமாரச்சி ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பணியாற்றி வந்தபோது, தனது மனைவியிடமிருந்து லொத்தர் சபையின் பாவணைக்கு வாடகைக்கு பெறப்பட்ட வாகனங்களில் தலா ஒவ்வொரு வாகனத்திற்கும் உண்மையான வரி ரூபா 635000.00 ஆக இருந்த நிலையில், ரூபா 960,000.00 வீதம் முறையற்ற விதத்தில் வரி செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களினால் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதன் அடிப்படையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்து அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் 2020 ஜனவரி 1 ஆம் தேதி தேசிய மரம் நடுகைத் திட்டத்திற்கு அமைவாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் வளாகத்தில் இலங்கையின் தேசிய மரமான நாக மரக்கன்றுகளை நாட்டியமை குறிப்பிடத்தக்கது.
வேறொருவரின் பெயரைப் பயன்படுத்தி ஒரு வியாபாரி பாடசாலைகளிலிருந்து நீக்ககப்பட்ட பழைய புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் செய்தித்தாள்களை 1 கிலோ கிராமிற்கு ரூபா 47.50 என்ற விகிதத்தில் வாங்க மத்திய மாகாண கல்வி அலுவலகம் வழங்கிய டெண்டரில் இருந்து, மோசடியாக நிறையை குறைத்து உண்மையான இடையை மறைத்து பெற்றப்பட்ட அந்த தொகுதிக்கு அதிபருக்கு இலஞ்சம் வழங்குவதாக கூறி 1 கிலோ கிராமிற்கு ரூபா 20.00 என்ற விகிதத்தில் இலஞ்சமாக வழங்குவதாகவும், நிறுக்கப்பட்ட பொருட்களுக்கான ரசீதுகளை 1 கிலோ கிராமிற்கு ரூபா 47.50 என்ற விகிதத்தில் வழங்கவும் சந்தேக நபர் பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில் 01.01.2020 அன்று, குறித்த வியாபாரி பாடசாலைக்கு வந்து பொருட்களை நிறுத்து உரிய விலையில் 32 கிலோவுக்கு மட்டுமே பணம் செலுத்தியிருந்தார். பின்னர் மோசடியான ஒதுக்கப்பட்ட பொருட்களுக்காக அதிபருக்கு ரூபா 7080ஃஸ்ரீ இனை இலஞ்சமாக கொடுத்த வியாபாரியினை அந்த இடத்திலேயே இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்யதனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் புத்தளம் பிரதான பொலிஸ் நிலையத்தில் மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் கடமையிலிருந்த பொலிஸ் அலுவலர் ஒருவரினால் பொறுப்போற்கப்பட்டிருந்த டிமோ பட்டா வகை லொறி ஒன்றின் வருமான வரிப்பத்திரம், காப்புறுதி பத்திரம் ஆகியவறறினை மீள வழங்குவதற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 10000.00 இனை இலஞ்சமாகக் கோரி அதில் ரூபா 5000.00 இனைக் குறைத்து எஞ்சிய ரூபா 5000.00 கோரிப் பெற்றுக் கொண்ட சந்தர்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
கம்பஹா பிராந்திய மின்சார அலுவலகத்தில் பணிபுரியும் மின்சார தொழில் நுட்ப அலுவலர் ஒருவர், பொலிஸ் அலுவலராக தன்னை அடையாளம் காட்டி முறைப்பாட்டாளர் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்கிறார் என்று குற்றம் சாட்டி அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து 20.12.2019 அன்று இலஞ்சமாக ரூபா 130,000. 00 இனை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு



இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954