மேல் நீதிமன்ற நீதிபதியினால் இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் HCB 2158/16 வழக்கில் குற்றத்தினை ஒப்புக் கொண்ட இரு குற்றவாளிகளுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்னை விதிக்கப்பட்;டு அது 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் தண்டப்பணமாக தலா ரூபா 10000.00 விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
நுவரெலியா தொழில் நியாயசபையில் வழக்கொன்றில் சாட்சியமளிப்பது தொடர்பில் முறைப்பாட்டாளர் ஒருவருக்கு உதவும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகள் மூலம் தொழிற்திணைக்களத்தின் இரு சிரேஷ்ட அலுவலர்கள் ரூபா 8000.00 மற்றும் ரூபா 1000.00 இனை இலஞ்சமாக கோரி, பெற்றுக் கொண்ட நிலையில் கைதாகினர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவும், UNODC மற்றும் UNDP முதலான மூன்று நிறுவனங்களும் இணைந்து கடந்த ஜூலை 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை கொழும்பில் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமான மாநாட்டை நடாத்தியது. இம்மாநாடானது 2012 ஆம் ஆண்டில் ஜகார்த்தாவில் வெளிப்படுத்தப்பட்ட பிரகடனத்தை மேலும் பலமிக்கதாய் மாற்றும் இலக்குடன் கொழும்பு பிரகடனத்தை தயாரிக்கும் நோக்குடனாகும். ஜகார்த்தா பிரகடனத்தின் நோக்கமானது ஊழலுக்கு எதிராக உலக நாடுகளில் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களை உண்மையிலேயே பலமிக்கதாகவும், சுயாதீனமானதாகவும் மாற்றுவதற்கான வழிகளை கலந்துரையாடுவதற்காக முன்னெடுக்கப்பட்டதாகும். அப்பிரகடனத்தில் 16 பிரிவுகள் உள்ளடங்கப்பெற்றுள்ளன. ஜகார்த்தா பிரகடனம் வெளியிடப்பட்டதன் பிரதான நோக்கம் ஐ.நாவின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் விதிமுறைகளுக்கு தெளிவான அர்த்தத்தை கொடுப்பதற்காகவாகும்.
30க்கும் அதிகமான நாடுகளின் நிபுணர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்ட கடந்த மூன்று நாட்களில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களினூடே, ஊழலுக்கு எதிரான நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் அவற்றின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவற்கும் பல்வேறு வழிமுறைகள் ஆய்விற்குற்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான உலகளாவிய நிபுணர் குழுவின் இரண்டாவது நாள் அமர்வானது கொழும்பு தாஜ்சமுத்ராவில் வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
உலகளாவிய நிபுணர் குழு கூட்டத்தினை (EGM)இலங்கைத் திருநாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து ஆரம்பித்து வைத்தார். கொழும்பு தாஜ்சமுத்ராவில் நடைபெற்ற நிகழவில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் உரைநிகழ்த்தும் போது அதிகாரமும் ஊழலும் இன்று தலைவிரித்தாடுகின்றது. ஊழலுக்கு எதிரான நிறுவனங்கள் தொடர்பான சட்ட திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புக்களுடன், ஊழலற்ற தேசத்தினை உருவாக்க ஸ்த்திரமான அரசியல் அபிலாசையும், அனைவரினதும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும் என தனது உரையினூடே தெளிவுபடுத்தினார்.
ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களை சுயாதீனமானதாகவும், பலமிக்கதாகவும் மாற்றும் நோக்கில் ஏற்றங்கீகரிக்கப்பட்ட ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான விஷேட உலகளாவிய நிபுணர் குழு கூட்டத்திற்கான (EGM) அனைத்து ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றன. உலகளாவிய நிபுணர் குழு கூட்டம் (EGM) கொழும்பு தாஜ்சமுத்ராவில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களை சுயாதீனமானதாகவும், பலமிக்கதாகவும் மாற்றும் நோக்கில் ஏற்றங்கீகரிக்கப்பட்ட ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான விஷேட உலகளாவிய நிபுணர் குழு கூட்டம் (EGM) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை கொழும்பு தாஜ்சமுத்ராவில் நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான சம்மேளனத்தில் கலந்து கொள்ள ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களினை பிரதிநிதித்தவப்படுத்தும் வகையிலான உலகலாவிய நிபுணர் குழுவினர் இலங்கை வரவுள்ளனர்.
போக்குவரத்து தொடர்பான குற்றம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அலுவலர் ஒருவரின் பொறுப்பில் இருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை முறைப்பாட்டாளர் தண்டப்பணத்தை செலுத்திய பின் மீளக் கையளிப்பதற்காக ரூபா1000.00 இனை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் குறித்த அலுவலரினை 2018.07.20 ஆம் திகதி கைது செய்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954