ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான உலகளாவிய நிபுணர் குழுவின் இரண்டாவது நாள் அமர்வானது கொழும்பு தாஜ்சமுத்ராவில் வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான உலகளாவிய நிபுணர் குழுவின் இரண்டாவது நாள் அமர்வானது கொழும்பு தாஜ்சமுத்ராவில் வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
உலகளாவிய நிபுணர் குழு கூட்டத்தினை (EGM)இலங்கைத் திருநாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து ஆரம்பித்து வைத்தார். கொழும்பு தாஜ்சமுத்ராவில் நடைபெற்ற நிகழவில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் உரைநிகழ்த்தும் போது அதிகாரமும் ஊழலும் இன்று தலைவிரித்தாடுகின்றது. ஊழலுக்கு எதிரான நிறுவனங்கள் தொடர்பான சட்ட திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புக்களுடன், ஊழலற்ற தேசத்தினை உருவாக்க ஸ்த்திரமான அரசியல் அபிலாசையும், அனைவரினதும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும் என தனது உரையினூடே தெளிவுபடுத்தினார்.
ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களை சுயாதீனமானதாகவும், பலமிக்கதாகவும் மாற்றும் நோக்கில் ஏற்றங்கீகரிக்கப்பட்ட ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான விஷேட உலகளாவிய நிபுணர் குழு கூட்டத்திற்கான (EGM) அனைத்து ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றன. உலகளாவிய நிபுணர் குழு கூட்டம் (EGM) கொழும்பு தாஜ்சமுத்ராவில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களை சுயாதீனமானதாகவும், பலமிக்கதாகவும் மாற்றும் நோக்கில் ஏற்றங்கீகரிக்கப்பட்ட ஜகார்த்தா பிரகடனம் தொடர்பான விஷேட உலகளாவிய நிபுணர் குழு கூட்டம் (EGM) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை கொழும்பு தாஜ்சமுத்ராவில் நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான சம்மேளனத்தில் கலந்து கொள்ள ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களினை பிரதிநிதித்தவப்படுத்தும் வகையிலான உலகலாவிய நிபுணர் குழுவினர் இலங்கை வரவுள்ளனர்.
போக்குவரத்து தொடர்பான குற்றம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அலுவலர் ஒருவரின் பொறுப்பில் இருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை முறைப்பாட்டாளர் தண்டப்பணத்தை செலுத்திய பின் மீளக் கையளிப்பதற்காக ரூபா1000.00 இனை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட நிலையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் குறித்த அலுவலரினை 2018.07.20 ஆம் திகதி கைது செய்தனர்.
முறைப்பாட்டாளர் 10 வருடம் பழமை வாய்ந்த 02 வாகனங்களை சட்டபூர்வமாக யப்பானிலிருந்து இலங்கைக்கு கொண்டு வருவதற்காக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் பரிந்துரையை வழங்கவதற்காக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுப் பிரதானி ஒருவர் இலஞ்மாக ரூபா 200000.00 கோரி, அதனை வழங்கா விடின் பரிந்துரை செய்து கொடு;க்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை செல்படியற்றதாக்குவதாக கோரி அப்பணமான ரூபா 200000.00 பெற்றுக் கொண்ட வேலையில் 2018.07.20 அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டார்.
அக்குறணை பிரதேச செயலாளராக பணி புரிந்த முஹம்மட் ஹனீபா முஹம்மட் நியாஸ் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலதுங்க அவர்கள் 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் குற்றப்பணமாக ரூபா 50000.00 மற்றும் தண்டப்பணமாக ரூபா 5000.00 மும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
UNODC இன் சுயாதீன மதிப்பீட்டாளர் திருமதி அபிகாயில் ஹேன்சனின் இலங்கை விஜயத்தின் போது, CIABOC ன் பணிப்பாளர் நாயகம் மற்றும் குழுவினரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் 19 ஆம் திகதி சந்தித்தார். அவர் இலங்கையின் ஏனைய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
சுமார் 1000 அரசாங்க இணையத்தளங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு சிறப்பு விருதானது(Merit Award) Bestweb.lk அமைப்பினால் கொழும்பு கலதாரி ஹோட்டலில் 2018.07.18 அன்று இரவு நடைபெற்;ற விருது வழங்கு வைபவத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
புலனாய்வு உத்தியோகத்தர்கள்> உதவி சட்ட அலுவலர்கள்> தடுப்பு நிவாரண உத்தியோகத்தர்கள்> தட்டெழுத்தாளர்கள் மற்றும் போக்குவரத்து அலுவலர் பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்க்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது. விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் கல்குடா பிரதேசத்தில் ஆரம்பிக்கவிருந்த கல் அருக்கும் வியாபாரத்திற்கான மத்திய சுற்றாடல் அதிகார சபையினூடாக பெற்றுக கொள்ள வேண்டிய சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான கல்குடா பொலிஸ் நிலையத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை முறைப்பாட்டாளருக்கு வழங்குவதற்கு அவரிடம் ரூபா 500000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ஒரு பகுதியாக ரூபா 300000.00 இனை இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட நிலையில் கல்குடா பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரினைஇ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் 2018.07.10 ஆம் திகதி கைது செய்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954