வழக்கிலக்கம்: 6835/2012
குற்றஞ்சாட்டப்பட்டவர்: எஸ். வீ. பி. ஹெக்டர் தர்மசிரி
வழக்கிலக்கம்: 6835/2012
குற்றஞ்சாட்டப்பட்டவர்: எஸ். வீ. பி. ஹெக்டர் தர்மசிரி
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு CaFFE அமைப்புடன் இணைந்து நத்தும் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஹட்டன் நகரில் 09.07.2019 மு. ப 9.00 நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்றது. ஆணைக்குழுவின் சார்பில் திருமதி மயூரி உடவெல (பிரதிப்பணிப்பாளர் நாயகம்) அநுராதா சிரிவர்தன (உதவிப்பணிப்பாளர் சட்டம்) ஆகியோர் கலந்து விரிவுரைகளை வழங்கிமை குறிப்பிடத்தக்கது.
ஆணைக்குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்ட தொடரில் அரசாங்க அலுவலர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு கடந்த 28.06.2019 அன்று அநுராதபுரத்தில் வடமத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வினை ஆணைக்குழுவின் அலுவலர்கள் முன்னெடுத்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்க்கான ஆணைக்குழுவின் புலனாய்வு உத்தியோகத்தர்களை ஆட்ச்சேர்ப்புச் செய்வதற்கான விடய ஆய்வுப் பரீட்சை 2019 ஜுலை மாதம் 04 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 11.30 மணிவரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கற்கைகளுக்கான பீடம், முனிதாஸ குமாரதுங்க மாவத்தை, கொழும்பு- 03 எனும் முகவரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018 ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களை ஆட்ச்சேர்ப்புச் செய்வதற்கான பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பரீட்சார்திகளுக்கே மேற்படி விடய ஆய்வுப் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் ஒட்டாவ நகரில் 2019 மே மாதம் 29-31 வரை நடைபெற் திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் CIABOC இன் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரிணி சரத் ஜயமான்ன அவர்கள் இலங்கை குழுவை பிரதிபலிக்கும் வகையில் கலந்து சிறப்பித்தார். இலங்கையின் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்ற வகையிலும், ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான விதிகளின் அடிப்படையில் முன்னெடுக்கும் வகையில் பொறுப்பு வாய்ந்த அலுவலராக சனாதிபதியின் செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே, இலங்கையியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அவர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
CIABOC தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதன் நோக்கில் கபே அமைப்புடன் இணைந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பான செயலமர்வுகளின் அங்குராற்பன நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிவில் அமைப்புக்கள்> சமூக நலன்புரி அமைப்புளின் பங்குபற்றலுடன் அங்குராற்பனம் செய்து வைக்கப்பட்டது.
CIABOC தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதன் நோக்கில் கபே அமைப்புடன் இணைந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பான செயலமர்வுகளின் அங்குராற்பன நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிவில் அமைப்புக்கள்> வர்த்தக சங்கங்கள்> சமூக நலன்புரி அமைப்புக்கள் மற்றும் உள்ளுராட்சி அமைப்புக்களின் பங்குபற்றலுடன் அங்குராற்பனம் செய்து வைக்கப்பட்டது.
முறைப்பாட்டாளர் வாகனங்களை லீசிங் செய்யும் நிறுவனத்தை நடாத்தி வந்ததுடன், குறித்த நிறுவனத்தின் லீசிங் செய்யப்பட்ட வாகனங்களை தரித்து வைக்கும் கட்டத்திற்கு சட்ட விரோதமாக மின் இணைப்பினை பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து, சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க ஹோமாகம பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்தின் அலுவலர் ஒருவர் ரூபா 100,000.00 இனை இலஞ்சமாக கோரி அதனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் 2019.06.20 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்னே அவர்கள் 2019 மே மாதம் 10 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக மன்றடியார் தலைமை அதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். முன்பு இவர் மேலதிக மன்றடியார் தலைமை அதிபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் தொடர்ந்தும் திரு. சரத் ஜயமான்னே அவர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியினை தொடர்கின்றார்.
ஆணைக்குழுவின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. பிரதான நுழைவாயிலானது புதிதாக மதில் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதினால் மூடப்பட்டுள்ளதுடன் பின் நுழைவாயில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் பாவணைக்காக திறக்கப்பட்;டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முயற்சிக்கு மேலதிகமாக அமைச்சரவையினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கமைய சட்டவரைஞர் திணைக்களத்துடன் இணைந்து புதிய சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தினை தயாரிப்பதற்கு CIABOC நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் டிஜிட்டல் முறைமையிலான சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கும் பரீட்சார்த்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. (இலத்திரனியல் முறைமையினூடாக சொத்துக்கள் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் மாதிரி படிவத்தை தயாரித்தல்). இம்முயற்சி நிறைவடையும் போது அரசாங்க அலுவலர்களுக்கு இலகுவாக தமது வெளிப்படுத்தல்களை வழங்கும் சந்தர்ப்பம் உதயமாகும் எனலாம்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்னே அவர்கள் இலங்கை அரச பிரதிநிதிகள் குழுவுடன் திறந்த அரசாங்கக்களுக்கிடையிலான பங்குபற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954