சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்திற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கான செயற்றிறன் மிக்க மூன்றாவது கலந்துரையாடல் அமர்வு 2019 ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் 2019 ஜுலை மாதம் 19 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்திற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கான செயற்றிறன் மிக்க மூன்றாவது கலந்துரையாடல் அமர்வு 2019 ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் 2019 ஜுலை மாதம் 19 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.
ஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 2019.07.11ஆம் திகதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. முதலாவது குற்றஞ்சாட்டப்படடுள்ள ஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் முறைப்பாட்டாளரான வலியமுனி தேவாலயாலகே சேனா ஆட்டிகலவிடமிருந்து ரூபா 300,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஹம்பகமுவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபல்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு CAFE அமைப்புடன் இணைந்து நடாத்தும் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஹட்டன் நகரில் 09.07.2019 பி. ப 2.00 பி. ப 4.00 மணி வரை நடைபெற்றது. ஆணைக்குழுவின் சார்பில் திருமதி மயூரி உடவெல (பிரதிப்பணிப்பாளர் நாயகம்) அநுராதா சிரிவர்தன (உதவிப்பணிப்பாளர் சட்டம்) ஆகியோர் கலந்து விரிவுரைகளை வழங்கிமை குறிப்பிடத்தக்கது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்கள் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ( BMICH) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான பொது கணக்குகளில் சிறப்பான செயல்திறனை அடைந்த அரச நிறுவனங்களுக்கான விருது வழங்கள் விழாவில் ஆணைக்குழுவின் சார்பில் ஜனாதிபதியிடமிருந்து தங்க விருதைப் பெற்றுக் கொண்டார்.
பொதுக் கணக்குக் குழுவின் சிறப்பு செலவின பிரிவின் கீழ் வரும் 838 நிறுவனங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இது அரச நிறுவனங்களின் பொது கணக்குகளில் சிறப்பான செயல்திறனை கருத்தில் கொண்டு பொதுக் கணக்குகள் குழுவால் செய்யப்பட்ட மதீப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெரானியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிகா விஜேசிங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலத்துங்க அவர்கள் இன்று (04) 24 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை முன்னெடுத்து செல்வதற்காக அதன் இடப்பரப்பில் கட்டடத்துடனான உபகரணங்களை எவ்வித இடயூறும் இன்றி இந்தியப்பிரஜையான கொட்டஹரலாகல்லி பேதப்பபையா நாகராசா என்வருக்கு வழங்குவதற்காக அவரிடம் இருந்து ரூபா 20 மில்லியன்களை இலஞ்சமாக பரிந்து கோரி பெற்றுக் கொண்ட சந்தர்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி இந்திகெட்டிய ஹேவகே குசும்தாஸ மகாநாமா மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பியதாச திசநாயக்க ஆகியோருக்கு எதிராக நிரந்த நீதாய மேல் நீதிமன்றில்
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான உத்தேச சட்ட வரைவு குறித்த பொது பங்குதாரர் ஆலோசனை SOCLAM இனால்; 2019 ஜூன் 25 ஆம் திகதி காலி ஹோட்டல் அமரியில் நடைபெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விழிப்பூட்டல் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை மற்றும் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்கள்> தம்பலகாமம் பிரதேச செயலாளர் மற்றும் குறித்த பிரிவின் கிராம சேவகர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
2018 ஒக்டோபர் மாதம் 01, 02, 04, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேரமுகப்பரீட்சை முடிவுகளின்படி கீழ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்கள அலுவலக உதவியாளர் சேவையின் தரம் III இல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துடன் இணைந்ததான கல்விப்பிரிவினரின் விழிப்பூட்டல் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடந்த 2019 ஜுன் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்றது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு



இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954