நாவுல பிரதேச செயலாளருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.
நாவுல பிரதேச செயலாளருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.
மதுகம பிரதேச சபையின் வெலிபன்ன உப காரியாலயத்தில் தொழில் நுட்ப அலுவலராக பணி புரிந்த ஊழியர் ஒருவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 16 மாத கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ரூபா 24000.00 தண்டம் விதித்துத்தீர்ப்பு.
தொழிலாளர் திணைக்களத்தின் பதுள்ளை மாவட்ட தொழிலாளர் காரியாலயத்தில் தொழிலாளர் கள அலுவலராக சேவை செய்த ஊழியர் ஒருவருக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 16 மாத கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ரூபா 24000.00 தண்டம் விதித்துத்தீர்ப்பு.
கௌரவ நீதிவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள் ரூபா 2000.00 இனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வெயங்கொடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத்தீர்ப்பு.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் முறைப்பாட்டாளர் காத்திருந்த வேலை அவரை பரிசோதித்து அவர் சட்டவிரோத நடவடிக்கையினை மேற்கொள்ள வந்தார் என குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க ரூபா 20000.00 கோரி, முறைப்பாட்டாளரின் கையடக்க தொலைபேசி மற்றும தேசிய அடையாள அட்டையினை பொலிஸ் அலுவலர் தனது பொறுப்பில் வைத்துக் கொண்டதுடன் முதலில் ரூபா 10,000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு முறைப்பாட்டாளருக்கு கையடக்க தொலைபேசி மற்றும தேசிய அடையாள அட்டையினை மீள ஒப்படைக்கும் போது பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் கான்ஸ்டபல் 74317 ஆன கீகியனகே நிலூக பெரேரா என்பவரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இவ் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2018.04.09 ஆம் திகதி கைது செய்தனர்.
2018.04.05 ஆம் திகதி முறைப்பாட்டாளரின் சுவர்ன பூமி உறுதியின் மூலம் அளிக்கப்பட்ட காணியில் சிலகாலம் விவசாயம் மேற்கொள்ளப்படாமையினால் உருவாகிய பற்றைக்காடுகளை அகற்றி குறித்த நிலத்தினை சுத்தம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு கையளித்த கடிதத்திற்கு அனுமதியை வழங்கவதற்கு ரூபா 10,000.00 இனை கோரி பின்னர் அதனை ரூபா 5000.00 ஆக குறைத்து அதனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்; விசாரணை அதிகாரிகள் கிராம சேவகரை கைது செய்தனர்.
முறைப்பாட்டாளருக்கு சொந்தமான இடமொன்றின் அளவீட்டுப்படத்தினை அனுமதித்து கொடுப்பதற்கான அவசிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ரூபா 15000.00 இனை 3 தடவைகளில் பெற்றுக் கொண்ட நிலையில் மேலும் அவ்விடத்தின் அளவீட்டுப்படத்தினை உறுதிப்படுத்துவதற்கு திட்டமிடல் குழுவிற்கு கையளிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் அலுவலர் ஒருவர் ரூபா 40,000.00 இனை கோரி பின்னர் அதனை ரூபா 15000.00 வரை குறைத்து அதனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் 2018.04.04. ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சனோதா ஹேர்பல் தயாரிப்பு நிறுவனத்தின் 2018 ஆண்டுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கான கோவையினை ஆயுர்வேத திணைக்களத்தின் ஆயுர்வேத போமியுலரி குழுவிற்கு (ஒரு உற்பத்தியானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனைக்க விடுவதற்கு உகந்தது என்ற சான்றிதழை வழங்கும் குழு) ஒப்படைத்து அனுமதியினைப் பெற்றுக்கொள்வதற்கு குழுவின் உறுப்பினர்களுல் ஒருவரான உதவி சட்ட அலுவலர் ஒருவர் 3 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாகக் கோரி அதனை இரண்டரை இலட்சமாகக் குறைத்து அதில் முற்பணமாக ரூபா 50000.00இனை ஆணைக்குழுவின் உபாய அலுவலர் முன்னிலையில் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் மூலம் ஆயுர்வேத போமியுலரி குழுவின் உறுப்பினரும் உதவி சட்ட அலுவலருமான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்திற்கான திருத்தங்களை கொண்டுவரும் நோக்கில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது 3 நாள் வட்ட மேசை கலந்துரையாடலினை மார்ச் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ஆணைக்குழுவின் சிறிய கேட்போர் கூடத்தில் நடாத்தியது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது ஊழலை இல்லாதொழிப்பதற்கான பணியில் ஓர் அங்கமாக கொழும்பில் உள்ள ஹோட்டல் தாஜ் சமுத்ராவில், 2018 மார்ச் 12, மற்றும் 13 ஆம் திகதிகளில் இரண்டு நாள் செயலமர்வினை “சொத்துக்கள் வெளிப்படுத்தல் மற்றும் ஆர்வ முரண்பாடுகளில் இருந்து பொதுத்துறையினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்” எனும் தொனிப்பொருளில் CIABOC, ஐக்கிய நாடுகள் சபையின் அபாயகர மருந்துகள், குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC) மற்றும் திருடப்பட்ட சொத்து மீட்புத் திட்டம் (StAR), உலக வங்கி (WB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடாத்தியது.
முறைப்பாட்டாளர் மூலம் சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை விசாரித்து சந்தேக நபர்களை கைது செய்து முறைப்பாட்டாளருக்கு சார்பாக அமையும் வகையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு, இலஞ்சமாக ரூபா25000.00 கோரி அதனை பெற்றுக்கொண்டதுடன், முறைப்பாட்டளரிடம் இருந்த வொட்கா வகை மதுபான போத்தலையும் பெற்றுக்கொண்ட நிலையில் 2018.03.13 ஆம் திகதி சீதுவ பொலிஸ் நிலையத்தின் குறித்த பொலிஸ் பரிசோதகரினை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954