தனமல்வில பிரதேச சபையின் தொழில்நுட்ப அலுவலர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
தனமல்வில பிரதேச சபையின் தொழில்நுட்ப அலுவலர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
காலி மஹமோதர வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இருவருக்கு நான்கு வருடங்கள் வீதம் 8 வருட சிறைத்தண்டனையுடன் தண்டப்பணம்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளரான நிசாந்த குணசேகர ஆகியயோருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த59720/01/16 எனும் இலக்க வழக்கானது தொழில் நுட்ப குறைபாடு காரணமாக 2018.01.19 ஆம் திகதி மீளப் பெறப்பட்டதுடன் அதே தினத்தில் ஏலவே மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் லங்கா சnதhச தலைவராக பணிபுரிந்த ருவன்ஜீவ பெர்னாந்து ஆகிய குற்றவாளிகளுக்கு எதிராக B/87776/18 எனும் இலக்கத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டது. மற்றும் ருவன்ஜீவ பெர்னாந்து எனும் குறிக்கப்பட்ட இரண்டாவது சந்தேக நபருக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்து வாக்குமூலமளிக்கமாறும் நீதிவான் நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டது.
வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தில் பணிப்பாளர் சபை மற்றும் பணியாளர்கள் சிலரால் ஏற்பட்ட நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் தற்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவருமான அப்துல் ஹமீட் மொஹமட் திலிப் நவாஸ் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் மற்றும் பிரதம நீதியரசரான பீட்டர் மொஹான் மைத்ரீ பீரிஸ் மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான மஹவிதானலாகே முனிதாஸ சார்லஸ் பெர்டினான்ந்து ஆகியோருக்கு எதிராக இலஞ்ச சட்டத்தின் 70 ஆம் பிரிவிற்கு அமைய கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
2018.01.17 ஆம் திகதி அக்கரைப்பற்று – மட்டக்களப்பு பாதையூடாக பயணிக்கும் பேரூந்துகளில் இருந்து ஒரு பணய தடவைக்கு கல்முனை பேரூந்துதரிப்பிடத்தில் நேரக்கணிப்பாளராக பணி புரிபவர், குறித்த இடத்தில் பேரூந்தினை நிறுத்தி வைப்பதற்கும் குறித்த பேரூந்தானது,பயணிக்கும் ஏனைய பேரூந்துகளில் இருந்து எவ்வித இடயூறுகளுமின்றி பபணிப்பதற்கான அவசிய ஏற்பாடுகளை செய்து தருவதற்காகவும்,கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் பணிபுரியும் நேரக்கணிப்பாளர் ஒருவர் ரூபா 100.00 இனை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்விசாரணை அதிகாரிகள் நேரக்கணிப்பாளரை கைது செய்ததுடன் அதே தினத்தில் அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
கிராமவாசியொருவருக்கு மரக்கட்டைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகளை பெற்றுக் கொடுப்பதற்காக ரூபா 2500.00 வன அலுவலர் கோரியுள்ளார். பின்பு ரூபா 500.00 இனை பெற்றுக் கொண்ட பின்பு அந்நபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
மீககஹவத்த பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரிக்கு ரூபா 134,000.00 இனை இலஞ்சமாக கொடுத்த நபரொருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
2016 ஆம் ஆண்டின்12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஏற்பாடுகளை கருத்திற் கொண்டு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் மேம்படுத்தப்பட்ட புதிய உத்தியோகபூர்வ இணையத்தளம் 2017 டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டமையின் மூலம் மக்கள் மயப்படுத்தப்பட்டது. இச்சிறப்பான நிகழ்வானது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் கௌரவ தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ரீ. பீ. வீரசூரிய, கௌரவ ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சித் லால் சில்வா, ஆணையாளர் கௌரவ நெவில் குருகே மற்றும் பணிப்பாளர் நாயகம் திரு. சரத் ஜயமான்ன, சனாதிபதி சட்டத்தரணி ஆகியோர் தலைமையிலும் சிவில் அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பங்குபற்றுதலுடனும் சிறப்பாக நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ அவர்களுக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தன்னால் ஈட்டப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக ரூபா 50 மில்லியனை செலவளித்துள்ளமையின் காரணமாக குறித்த அத்தொகையானது இலஞ்சம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற ஊகத்தின் அடிப்படையில் இலஞ்ச சட்டத்தின் 23(அ) பிரிவின் கீழ் மேல் நீதிமன்றத்தில் 2017 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
ரூபா 3000.00 இனை இலஞ்சமாக பெற்ற பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தின் மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவின் 3 பொலிஸ் அலுவலர்களினை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2017.12.14 ஆம் திகதிகைது செய்தனர்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமான டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியன்று ஆணைக்குழுவின் பிரதான நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலின் 'கிரேன்ட் மார்கீ' மண்டபத்தில் மு.ப 9.00 மணிமுதல் பி.ப 12.30 வரைக்கும் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வானது கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளின் 150 சிவில் சமூக உறுப்பினர்களின் பங்கேற்ப்புடனும் கொழும்பின் பல்வேறு பயிற்சி நிலையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 100 விடுகை வருட மாணவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
A 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.
T+94 112 596360 / 1954
M+94 767011954