நாடொன்றின் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான கொள்கைத்திட்டம் காணப்படுதல் வேண்டும். அக்கொள்கையானது திட்டமாக ஒட்டு மொத்த மக்களிடத்தும் வெளிப்படுத்தப்படல் வேண்டும். அச்சந்தர்ப்பத்திலேயே இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்நிலைமையினை 2015இல் ஆட்சிபீடமேறிய அரசாங்கம் 2017 ஒக்டோபர் மாதமளவில் புரிந்து கொண்டமையின் வெளிப்பாட்டினால் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டத்தினை தயாரிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.







